என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
- அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே உள்ள பனைமரத்தில் ஏறினார்.
- மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி வெள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது27). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி குன்னத்தூருக்கு வந்திருந்தார்.
அப்போது அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே உள்ள பனைமரத்தில் ஏறினார். இதில் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






