என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி சாவு
- அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.
- மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகுமார் (வயது 32). கூலி தொழிலாளி.இவர் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனம் எதிர்பாராத விதமாக மணிகுமார் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மணிகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






