என் மலர்
உள்ளூர் செய்திகள்

உறவினர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு
- உறவினர்கள் சிலருடன் அமர்ந்து கணேசன் மது அருந்தியுள்ளார்.
- தாக்கப்பட்ட கணேசன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மடம் கீழ் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). நேற்று தனது வீட்டில் உறவினர்கள் சிலருடன் அமர்ந்து கணேசன் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உறவினர்களால் தாக்கப்பட்ட கணேசன் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணேசன் உயிரிழக்க தாக்கப்பட்டதுதான் காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






