என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது.
- நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஜோகிர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது54). கூலித்தொழிலாளி.
இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளது. இதன்காரணமாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி அவர் நெஞ்சுவலியால் அவதி அடைந்து வந்தார். இதன்காரணமாக கோவிந்தன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தும் பலனில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் குமார் என்பவர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






