என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரும்பாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
- பெரும்பாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேலும் பறை இசை மேளங்கள் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாலை ஊராட்சி மன்ற தலைவராக கஸ்தூரி சரவணன், துணைத் தலைவராக ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர். பெரும்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் பணி வழங்க வேண்டும் என பெரும்பாலை ஊராட்சி மன்ற தலைவர், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்கள் என தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக பெரும்பாலை அல்லாத வேறொரு ஊராட்சியில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது முறையாக பதிலளிக்காமல் உதாசீனப்படுத்துவதாக தெரிவித்த இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் பெரும்பாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பெரும்பாலை ஊராட்சியில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்தும், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தகுதியான எங்கள் அனைவரையும் புறக்கணித்துவிட்டு, வேறொரு ஊராட்சியை சேர்ந்த நபரை முறைகேடாக பணித்தள பொறுப்பாளர் பணியில் அமர்த்தி உள்ளனர் என குற்றம் சாட்டினர். மேலும் பறை இசை மேளங்கள் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்