search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் தின விழா
    X

    மகளிர் தின விழா

    • மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார்.
    • உலக அரங்கில் மகளிர் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் சுகுமார் வரவே ற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்து மகளிர் தின விழாவின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் மற்றும் உலக அரங்கில் மகளிர் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி யாளர்கள், அலுவலக பெண் ஊழியர்கள் மற்றும் மகளிர் உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஆகியோர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பரிசு வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் வருவாய் ஆய்வாளர்கள் மணி, கவிப்பிரியா மற்றும் தாலுகா அலுவலக பணியா ளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×