search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காணலாம்.

    பழனி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்

    • அழகாபுரி ராஜாபுரம் பகுதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை.
    • இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அழகாபுரி ராஜாபுரம் பகுதியில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் வலியுறுத்தி விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×