search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் மகளுடன் மாயமான பெண்ணுக்கு வலை
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையத்தில் மகளுடன் மாயமான பெண்ணுக்கு வலை

    • கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
    • தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கோகிலாபுரம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் அருள்ஜோதி(30). இவரு க்கும் கோவையை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரு க்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பயோஜாஸ்ரீ(10) என்ற மகள் உள்ளார்.

    கருத்துவேறுபாடு காரணமாக அருள்ஜோதி கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து செல்வராஜ் உத்தமபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×