என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகத்தில் மிளகாய்பொடி தூவி   பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
    X

    முகத்தில் மிளகாய்பொடி தூவி பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

    • மர்ம நபர்கள் 2 பேர் தமிழரசியை பின்தொடர்ந்துள்ளனர்.
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்.இவரது மனைவி தமிழரசி (வயது 59). இவர்களுடைய மகள் ரேணுகா கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், குறிஞ்சி நகரில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தனது மகளை பார்க்க ஓசூர் குறிஞ்சி நகருக்கு தமிழரசி வந்துள்ளார்.நேற்று ஓசூர் சாலையில் மணல் மாரியம்மன் கோவில் அருகில் தமிழரசி நடந்து சென்று கொண்டிருநதார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் தமிழரசியை பின்தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் திடீரென்று மர்ம நபர்கள் துணிப்பையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தமிழரசியின் முகத்தின் மீது தூவினர். பின்னர் அவர் எரிச்சலால் கத்தினார்.

    இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு 2 பேரும் தப்பி ஓடினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து தமிழரசி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×