search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    • வேலை முடிந்து இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு ெசன்றார்.
    • மர்ம நபர்கள் 7 பவுன் தங்க தாலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வக்கினம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மனைவி தென்றல் (வயது 33). இவர் செல்லம்பட்டி பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் வேலை முடிந்து இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டிற்கு ெசன்றார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தென்றலை சாலையில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 7- பவுன் தங்க தாலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து தென்றல் போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகன்றனர்.

    Next Story
    ×