என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் ஐகோர்ட்டு பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
- ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென உமாதேவி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.
திருவள்ளூர்:
சென்னை ஐகோரட்டில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் உமா தேவி. (49). இவர் குடும்பத்துடன் காரில் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். திருவள்ளூர் மீரா திரையரங்கம் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர். பின்னர் காரில் ஏறுவதற்காக வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென உமாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த உமாதேவி நகையை பிடித்தபோது அது அறுந்தது. இதையடுத்து 2½ பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






