என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மல்லசமுத்திரத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி
- 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வெங்கடேச புரியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் அவதியடைந்த சரோஜா கடந்த 19-ந் தேதி சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் சரோஜாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரோஜா நேற்று பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான தகவல் மல்லசமுத்திரம் பகுதியில் வேகமாக பரவியது.
இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மல்லசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெங்கடேசபுரி, ஏரிக்காடு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் அச்சம் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் மல்லசமுத்திரம் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்