என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் பெண் சாவு
    X

    விபத்தில் பெண் சாவு

    • செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், செம்பரம்முத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி தாரா (வயது42). இவர் கடந்த 3-ந்தேதி அன்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செந்தாரப்பள்ளி பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தாரா உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×