search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த பெண் சாவு
    X

    தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த பெண் சாவு

    • தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
    • முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் கவிராஜ். இவரது மனைவி கவிதா (வயது48). இவரது மகன் விக்னேஷ். இந்த நிலையில் கவிதாவின் தாய் வீடு ஒட்டப்பட்டியில் உள்ளது.

    தனது தாய் வீட்டிற்கு கவிதா, மகன் விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழகம் அருகில் வந்த போது முன்னால் சென்ற வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கவிதா சாலையில் விழுந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கவிதா உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×