என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாணி பவுடர் குடித்த பெண் சாவு
- சாணி பவுடரை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
கடத்தூர்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 56). சற்று மனநலம் பாதிக்கபட்டவர். இவர் புதுப்பட்டி அடுத்த ஒசஅள்ளிபகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சாணி பவுடரை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரிஅரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






