என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி பெண் சாவு
    X

    வேன் மோதி பெண் சாவு

    • வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 31).

    இவரும் அவரது உறவினரான அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்புபோது பின்னால் வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த லட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். செல்வத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இரு–வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே லட்சுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். செல்வத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×