search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்துங்கநல்லூரில்  கார் கவிழ்ந்து பெண் பலி - கணவர், மகன், மகளுக்கு தீவிர சிகிச்சை
    X

    கார் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    செய்துங்கநல்லூரில் கார் கவிழ்ந்து பெண் பலி - கணவர், மகன், மகளுக்கு தீவிர சிகிச்சை

    • செய்துங்கநல்லூர் வளைவு பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • உயிரிழந்த கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி கல்யாணி (வயது43).

    இசக்கிபாண்டி நேற்று நள்ளிரவு தனது மனைவி, மகன் இமானுவேல் பிரபு, மகள் ரம்யா ஆகியோருடன் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு கார் செய்துங்கநல்லூர் வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் சம்பவ இடத்திலேயே கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இசக்கி பாண்டி, ரம்யா, இமானுவேல் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×