என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
    X

    இருசக்கர வாகனம் மோதி பெண் பலி

    • ரோட்டை கடந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

    மத்தூர்,

    பெங்களூரில் இருந்து 50 பேர் அரசு பேருந்து ஒன்றில் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டி ருந்தனர். அப்போது சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி என்ற இடத்தில் இயற்ைக உபாதைகள் கழிப்பதற்காக ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி உள்ளார். அப்போது பெங்களூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த காயத்ரி (55) என்பவர் ரோட்டை கடந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்தவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×