என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி பெண் சாவு
    X

    கார் மோதி பெண் சாவு

    • ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்
    • அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நேற்று ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×