என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
- மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.
- திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணைநல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். அவரது மனைவி நிர்மலா (வயது40) . இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வயல்வெளியில் உள்ள தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அந்த மாடுகளை வீட்டுக்கு காந்தலவாடி சாலை வழியாக ஓட்டி வந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story






