என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை
- சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. -
- கோவிந்தம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள குடிமெனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ரங்கபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள் (48).
இவருக்கு சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதில் மனமுடைந்த கோவிந்தம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரங்கபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் விரைந்து வந்து கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






