என் மலர்
உள்ளூர் செய்திகள்

வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
- மின்னக்கல் பிள்ளை–யார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவர் ராசிபுரத்தில் கடந்த 29 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
- வக்கீல் ரகுபதி வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரத்தினவேல் மனைவி கல்பனாவுக்கும் (40) இடையே அடிதடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள மின்னக்கல் பிள்ளை–யார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவர் ராசிபுரத்தில் கடந்த 29 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் மின்னக்கல் பகுதியைச் சேர்ந்த பூபதி (30), இவரது மனைவி காயத்ரி ஆகியோருக்கும், வக்கீல் ரகுபதி வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரத்தினவேல் மனைவி கல்பனாவுக்கும் (40) இடையே அடிதடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பூபதி மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கு ஆதரவாக வக்கீல் ரகுபதி செயல்–பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வக்கீல் ரகுபதி மீது ஆத்திரம் அடைந்த கல்பனா, வக்கீலின் வீட்டிற்கு சென்று வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லை–யென்றால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி ரகுபதி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனாவை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.






