search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வாலங்குளத்துக்குள்  நிலைதடுமாறி விழுந்த தொழிலாளி சாவு
    X

    கோவை வாலங்குளத்துக்குள் நிலைதடுமாறி விழுந்த தொழிலாளி சாவு

    • துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • ரெயில்வே தண்டவாளம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள ஜி.எம். நகரை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 55). இவர் 5 முக்கில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாலாங்குளம் ரெயில்வே தண்டவாளம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு குளத்துக்குள் மயங்கி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் நீரில் மூழ்கி இறந்த அப்துல்காதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×