என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் வங்கி கணக்குடன்ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
    X

    விவசாயிகள் வங்கி கணக்குடன்ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

    • ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 7953 விவசாயிகள் தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 13-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திடவும், இல்லை யெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கிடவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×