என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயிற்று வலியால்   கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வயிற்று வலியால் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • வயிற்றுவலியால் உயிரை மாய்த்த தொழிலாளி.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் அருகே உள்ள கீழ்மத்தூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38). இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது.

    மூன்று குழந்தைகள் உள்ளன. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி வயிற்று வலி வந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் தூக்கில் தொங்கினார்.

    இது குறித்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×