search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் ஆபத்தான மின்கம்பம்  சீரமைக்கப்படுமா?
    X

    உடுமலையில் ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

    • மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
    • வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

    உடுமலை :

    உடுமலை-தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் காங்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டும், இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளதால் அச்சத்துடனேயே மக்கள் அந்த பகுதியை கடக்கும் நிலை உள்ளது.

    அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் மின் வாரிய ஊழியர்கள் இந்த கம்பத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

    மேலும் பொதுமக்கள் இந்த கம்பத்துக்கு அருகில் வருவதற்கே அஞ்சும் நிலை உள்ளதால் அருகிலுள்ள வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே இந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×