search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ
    X

    கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ

    • தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
    • மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ பற்றி எரிவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் கடையநல்லூரில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கிருஷ்ணா புரம் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்து குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து கிடக்கின்றது.

    காற்றின் வேகத்தால் அந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ விபத்து ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் அதேபோல் மலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென பரவி வருகிறது.

    அதனை அணைக்கும் முயற்சியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×