என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
- கணவர் நினைவாகவே இருந்த நிலையில் மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி தாதகோனார்சந்து பகுதியை சேர்ந்த மருதராஜ் மனைவி ராணி(45). மருதராஜ் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று 30-ம் நாள் முடிந்து வீட்டில் மருதராஜூக்கு ராணி மற்றும் குடும்பத்தினர் சாமி கும்பிட்டனர். இன்று தனது கணவர் நினைவாகவே இருந்த நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






