என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

    • நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
    • மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், ஒகேனக்கல், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, சித்தேரி, பள்ளிப்பட்டி, இருளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்று மதியம் 2 மணி முதல் காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

    இதனால் பல்வேறு இடங்களில் வாழை, முருங்கை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் முறிந்தன. இந்த மழையால் சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கியது.

    கனமழையால் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.

    வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 5-வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் 2-வது நாளாக நேற்று பரவலாக மழை பெய்தது. தருமபுரி நகரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்ததால், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை குளிர்ந்த காற்று வீச தொடங்கி யவுடன் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் 2 தினங்களாக பரவலாக மழை பெய்ததால், ஆங்காங்கே உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×