search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

    • காலையில் வெயில் வாட்டி வதைத்தது.
    • ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது.

    மாலையில் மேக–மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாவட்டத்தில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- காடையாம்பட்டி 17, மேட்டூர் -13.2, பெத்தநாயக்கன்பாளையம் -13, ஆனைமடுவு - 8, சங்ககிரி - 7.4, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி - 6, எடப்பாடி - 4, தம்மம்பட்டி-2 என மாவட்டம் முழுவதும் 51.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×