என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகில் இறந்து கிடந்த முதியவர் யார்?
- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இது குறித்து பெரியேரி கிராம் நிர்வாக அலுவலர் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பற்றி விசாரிக்கையில் பெயர் ராமசாமி என்பது தெரியவந்தது. அவருடைய முகவரி தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த முதியவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அது குறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story