search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் - அடுக்கம் சாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    சாலையின் பெரும்பகுதியை செடி-கொடிகள் ஆக்கிரமித்துள்ளது.

    கொடைக்கானல் - அடுக்கம் சாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    • சாலையின் இருபுறமும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மு ண்டி 10 மீட்டர் சாலையில் 5 மீட்டர் சாலையை செடி கொடிகள் ஆக்கிரமித்து ள்ளது.
    • செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து செல்வதற்கு சுமார் 20 கி.மீ தொலைவு பயணத்தை மிச்சப்படுத்தும் சாலையாக அடுக்கம்-கொடைக்கானல் சாலை உள்ளது.

    தேனியில் இருந்து காட்ரோடு வழியாக 85 கி.மீ தொலைவில் கொடைக்கா னல் செல்லும் முக்கிய சாலை உள்ளது. அடுக்கம் சாலை வழியாக தேனியில் இருந்து 67 கி.மீ பயணத்தில் கொடைக்கானல் சென்றடையலாம்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தொடர்ச்சியாக இந்த சாலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வரை முழுமை யாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    நிலச்சரிவு ஏற்பட்ட சில இடங்களில் கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது.

    இருந்த போதும் இந்த சாலையின் இருபுறமும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மு ண்டி 10 மீட்டர் சாலையில் 5 மீட்டர் சாலையை செடி கொடிகள் ஆக்கிரமித்து ள்ளது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் சாலையாக அடுக்கம் சாலை மாறி உள்ளது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யப்படாத இடங்களில் செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிக ளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    தேனி மாவட்டத்திலிருந்து விவசாய பொருட்கள் கொண்டு செல்வதற்கும், சுற்றுலா பயணிகள் இயற்கை கொஞ்சும் அழகை ரசித்து செல்வதற்கும் கும்பக்கரை அருவிக்கு செல்லவும் இந்த சாலை ஏதுவாக இருந்தது. தற்போது இந்த சாலை பராமரிப்பு இன்றி பழைய நிலைக்கு மாறி உள்ளது.

    கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணி கள் கும்பக்கரை அருவிக்கு இந்த அடுக்கம் பாதை வழியாக அதிகளவில் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது இந்த சாலையின் அபாய நிலை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. திறக்க ப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில் பலமுறை நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள், விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×