என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு மேய்க்க சென்ற போது   விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சாவு
    X

    மாடு மேய்க்க சென்ற போது விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சாவு

    • கிழங்கு ஒன்றை பறித்து தின்றுள்ளார்.
    • கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா அருகேயுள்ள வெலகளகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 62).

    இவர் கடந்த 29-ந்தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது காட்டு பகுதியில் கிழங்கு ஒன்றை பறித்து தின்றுள்ளார். அது விஷக்கிழங்கு என்று தெரிகிறது.இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

    நேற்று கோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகள் கோவிந்தி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×