வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் படுகாயம்

சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.
வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் படுகாயம்
Published on

திருவொற்றியூர் வடக்கு மாட வீதி, செட்டி தெருவில் வசித்து வருபவர். நிர்மலா. இந்த வீட்டின் பாழடைந்த பால்கனி திடீரென இடிந்து அருகில் உள்ள வெங்கடேசன் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

அப்போது அருகில் விளையாடிக் காொண்டு இருந்த நிர்மலாவின் 3 வயது பேரன் நவீன் கிஷோரின் தலையில் கட்டிடத்தின் கல் பட்டது. இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசன் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com