search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி-எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    பொதுமக்களுக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி-எம்.எல்.ஏ. வழங்கினார்

    • தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் 45-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தி.மு.க. சார்பில் தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார் . தொடர்ந்து கட்சி கொடியேற்றி ஒவ்வொரு வட்டத்திலும் ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, கார்த்திகேயன், ஆர்.கே. நீலகண்டன், மண்டல பொறுப்பாளர்கள் கலையரசன், நகர நிர்வாகிகள் சுப்பிரமணியன், எழில், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், ஆனந்த், வட்ட செயலாளர்கள் அண்ணா.பிரகாஷ், கார்த்திகேயன், ராஜகுமார், ராஜேந்திரன், ராஜா,

    மாமன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான் இப்ராஹிம், சந்திரலேகா சசிகுமார் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×