என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

    • மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 496 மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 21 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், பிச்சம்பாளையம் புதூர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்–தில் அமைப்பாளராக பணிபுரிந்து இறந்தவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×