என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு நல உதவிகள்
- 22 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
ஊனமுற்றோா் மற்றும் மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.2,000 பெறுவதற்கான ஆணையினையும், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 2 நபா்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும், 22 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் மாவட்ட கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story






