என் மலர்
உள்ளூர் செய்திகள்

316 பேருக்கு ரூ.1.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- அரூர் வட்டத்தில் 316 பேருக்கு ரூ. 1. 31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
- கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், பொய்யப்பட்டிகிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கி.சாந்திதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 167 பயனாளிகளுக்கு ரூ.68.85 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைபட்டாக்கள், இணையவழி பட்டாக்கள், நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளையும், 87 பயனாளிகளுக்கு ரூ.16.49 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி, முதி யோர், முதிர்கண்ணி, ஆதர வற்ற விதவை, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் மற்றும் விபத்து இழப்பீட்டு தொகை கள் வழங்கப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்து றையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.5.75லட்சம் மதிப்பீட்டில் விதைகள், உயிரி உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி களையும்,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில், குழத்தட்டு நாற்றுகள், நுண்ணீர் பாசனம் உள்ளிட்டநலத்திட்ட உதவி களையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகள் என மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூ. 1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கி.சாந்தி வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, பன்னாரி சர்க்கரை ஆலை உள்ளிட்டதுறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டார்கள். இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் கூறியதாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும்எ டுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியர்களுக்கும், பெண்க ளுக்கும், தாய்மார்க ளுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்தி ட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார். இவ்வாறு் அவர் கூறினார்.






