search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிவு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து சரிவு

    • அணையின் நீர் மட்டம் 140 அடி வரை உயர்ந்தபோது அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டது.
    • தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு கடந்த வாரம் நீர் வரத்து அதிக அளவு இருந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 140 அடி வரை உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலையில் நீர் மட்டம் 136.80 அடியாக உள்ளது. நேற்று 1379 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 542 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 1866 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6320 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டமும் கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 969 கன அடி மட்டுமே

    வெளியேற்றப்படுகிறது. நீர் மட்டம் 69.31 அடியாக உள்ளது. வரத்து 1818 கன அடி. இருப்பு 5652 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 124 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×