என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

    • முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர்வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2023- 24-ம் ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமை தாங்கினார்.

    இதில், வருவாய்த்துறை அலுவலர்கள், வேளா ண்மைத் துணை அலுவ லர்கள், நீர்வளத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரநிதிகள், முன்னாள் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை, இப்பகுதி விவசாயிகளுக்கும் வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கே.ஆர்.பி., அணை இடது மற்றும் வலது புற கால்வாய்களை உடனே தூர்வார வேண்டும். அதன்பின்னர் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வருகிற ஜூலை 3-ந் முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசை கேட்டுக் கொள்வது.

    வலது மற்றும் இடதுபுற கால்வாயில் உள்ள 9012 ஏக்கரில் கிருஷ்ணகிரி அணையில் பாசன வசதி பெறும் புஞ்சை நிலங்களை நஞ்சை நிலமாக மாற்றித்தருமாறு கேட்டுக் கொள்வது.

    தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர்வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம். மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்றுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×