search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கால்வாயில் தேங்கி கிடக்கும் கழிவு நீர்
    X

    சாக்கடை கால்வாயில் தேங்கி கிடக்கும் கழிவு நீர்

    • பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.
    • செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த நாரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை.

    ஊராட்சி மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட குறுகிய சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியதால், அப்பகுதியில், பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.ஆனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து, பயிர்கள் நாசமாகின. இதையடுத்து, சாக்கடை கால்வாயை அடைத்துள்ளனர். இதனால், கடந்த, ஆறுமாதங்களாக வெட்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா தலைமையில், டாக்டர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் பாஸ்கர், செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுபுழுக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகிறோம். கழிவு நீர் செல்ல வெட்டப்பட்ட குழியால் வீடுகளுக்கு செல்ல கூட பாதையில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சாக்கடை கால்வாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×