search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தொட்டியிலிருந்து வீணாக வெளியேறிய தண்ணீர்
    X

    மருத்துவ வளாகத்தில் குடிநீர் தொட்டியிலிருந்து வீணாக வெளியேறிய ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்.

    குடிநீர் தொட்டியிலிருந்து வீணாக வெளியேறிய தண்ணீர்

    • மருத்துவமனையில் கை கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
    • குடிநீர் தொட்டியில் இருந்து நீண்ட நேரமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் சென்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 17,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு குடிநீர் தினந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை காலம் என்பதால், ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டு அதிகமாக உள்ளது. அரசு மருத்துவமனையிலும் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் பொதுமக்கள் ஆகியோர் கடைகளில் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை இருந்து வருகிறது. இது தவிர மருத்துவமனையில் கை கழுவும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்த நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து நீண்ட நேரமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கால்வாயில் சென்றது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில் மருத்துவமனையில் குடிநீர் தொட்டியில், இவ்வாறு குடிநீர் வீணாகி சென்றது, நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

    Next Story
    ×