search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்
    X

    கோத்தகிரி பேரூராட்சியில் வார்டு சபை கூட்டம்

    • 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்படுகிறது.
    • குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக நாள் ஒன்றிற்கு 2 வார்டுகள் வீதம் குறிப்பிட்ட பகுதிகளில் சாபா கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை மனுக்களாக பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று 9-வது வார்டு பகுதிக்கான கூட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் முக்கிய குறைகளான நடைபாதை அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், தெருவிளக்கு கம்பம் புதிதாக அமைத்தல் போன்றவை முக்கிய குறைகளாக கருதப்பட்டு அதனை உடனடியாக சரி செய்ய முடிவெடுக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பேசிய பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி அவர்கள் இப்பகுதியில் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.இதே போன்று மிஷன் காம்பவுண்ட் பகுதியிலும் கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×