என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த விழிப்புணர்வு பேரணி
- வாக்குச்சாவடி மையங்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்.
- பாரதிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது முகவரி மாற்றம் செய்யப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும் என தெரிவிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி இலக்கியம்பட்டி, செந்தில் நகர், பாரதிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
Next Story