என் மலர்
உள்ளூர் செய்திகள்
15, 16-ந்தேதிகளில் வருகைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தயாராகும் சேலம்
- தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார்.
சேலம்:
தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கள ஆய்வு கூட்டம் வருகிற 15, 16-ந் தேதிகளில் சேலத்தில் நடக்கிறது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டப்பணிகள் செயல்படுபத்தப்படுவது குறித்து துறை வாரியாக ஆய்வு செய்கி்றார். கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் ஆலோசனை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் கடந்த 2021-22-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அனுப்ப உத்தரவிட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த விவரங்களை சேகரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
மேலும் அவர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியும் சில அலுவலக கட்டிடங்களில் மாற்றங்களுடன் கூடிய சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்தில் உள்ள இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் இரண்டடுக்கு மேம்பாலங்கள் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. 2 நாள் சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமிடுவதால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.









