search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி
    X

    நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி

    • சாத்தூரில் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 34). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இருக்கன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வி (38), கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள காரக்காடு பகுதியைச் சேர்ந்த பைசல் ஆகியோர் நிதி நிறுவனத்துக்கு வந்தனர். அங்கு வைரமுத்துவிடம் எங்களுக்கு சொந்தமான 458 கிராம் தங்க நகை, சாத்தூர் அரசு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு மறு அடகு வைக்க பணம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.

    இதை நம்பி வைரமுத்து ரூ.14.5 லட்சத்தை 2 பேரிடமும் கொடுத்துள்ளர். மேலும் அவர்களுடன் பாலாஜி என்பவரை வைரமுத்து அனுப்பி வைத்துள்ளார்.

    பைசல், மாரிச்செல்வி வங்கிக்கு செல்வது போல் நடித்து பாலாஜியை ஏமாற்றி பணத்துடன் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த வைரமுத்து மோசடி தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    2 தனிப்படைகளை அமைத்து போலீசார் கேரளா மற்றும் தென்காசிக்கு சென்று 2 பேரையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை தென்காசியில் பதுங்கி இருந்த மாரிச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்த 2 கார்களையும் பறிமுதல் செய்த போலீசார் மாரிச்செல்வியை சாத்தூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முக்கிய குற்றவாளியான பைசலை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×