search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னோடி வங்கி தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம்
    X

    முன்னோடி வங்கி தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம்

    • விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தநிகழ்ச்சியில் கடன் வழங்குதல், புதிய கடன் விண்ணப்பம் பெறுதல், பிரதமரின் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டத்தில் புதிதாக இணைத்தல், நிதிசார் கல்வி மற்றும் வங்கி சார்ந்த சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக தீர்த்துக்கொள்ளும் வகையில் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

    இதில் வேளாண்கடன், தொழில்கடன், கல்விக்கடன், வீடு மற்றும் வாகன கடன் போன்ற கடன் வேண்டுவோர் நேரடியாக பங்குபெற்று பயன்பெறலாம்.

    ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களை போக்கி எளிதில் கடன்பெறவும் பயனுள்ளதாக அமையும்.

    எனவே புதிய தொழில் தொடங்கவும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×