search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கம் மூலம் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கூட்டுறவு சங்கம் மூலம் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

    • கூட்டுறவு சங்கம் மூலம் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
    • இத்தகவலை மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 38 கிளைகள், 180 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 3 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாப்செட்கோ) சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ), ஆதி திராவிடர் நலக்கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திட அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கான (டாம்கோ VIRASAT) கடன்களுக்கு தனி நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு . கடனாக தனி நபர் ஒருவருக்கு ரூ.50 லட்சம் வரையிலும் வழங்கப்படுகின்றது.

    கடன் பெற விரும்பும் பயனாளிகள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமான சான்று, பிறப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம். மாற்று்த திறனாளிகளைப் பொறுத்த வரை மேற்காண் சான்றி தழ்களுடன் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய அட்டை மற்றும் ஆதார் அட்டை சமர்ப்பித்து கடன் பெறலாம்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கஙகள், நகர கூட்டுறவு வங்கிகள். நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை தொடாபு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதி வாளர்/முதன்மை வருவாய் அலுவலர் 9489927003. பொது மேலாளர் 9489927001. உதவி பொது மேலாளர் (கடன்) 9489927006 மற்றும் மேலாளர் (கடன்) 9489927177 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    இத்தகவலை மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×