search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்
    X

    15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்

    • 15 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.
    • இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    கடந்த 18-ந்தேதி மாணிக்கம்தாகூர் எம்.பி. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எழுதிய கடிதத்தில் விருதுநகரில் கடந்த 19-–ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக் கான அழைப்பிதழில் மாவட்ட எம்.பி.க்கள் பெயர் இடம் பெறவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் நடை முறைக்குழு சார்பில் துணை செயலாளர் பாலகுரு அனுப்பியுள்ள கடி தத்தில், மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து நிகழ்ச்சி நடத்திய வங்கி, 15 தினங்களுக்குள் விளக்கம் பெற்று அனுப்பு மாறும், இதுகுறித்த அறிக்கை நாடாளுமன்ற சபா நாயக ருக்கும் நிதி மந்திரிக்கும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதுகுறித்த தகவல் நாடா ளுமன்ற உறுப்பி னருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட் டுள்ளார்.

    இந்த கடித நகல் மாணிக்கம்தாகூர் எம்.பி.க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடவ டிக்கை எடுத்ததற்காக நாடாளுமன்ற சபாநாய கருக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் இது ஒரு சரியான பாடமாக அமையும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×