என் மலர்
உள்ளூர் செய்திகள்

யோகாவில் பரிசுகளை குவித்து வரும் மாணவி ஜெயவர்தினி.
சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு
- சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் இந்த போட்டி நடைபெறும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்த குடியரசு-கீதா தம்பதியின் மகள் ஜெயவர்தினி (வயது12). 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குடியரசு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி யோகா பயிற்சிக்கு சென்று வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி மற்றும் மகளையும் தன்னுடன் யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றார்.
இவரது மகள் ஜெயவர்தனி கடந்த 8 மாதங்களில் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதில் மாவட்ட அளவில் 3 போட்டிகள், மாநில அளவில் 3 போட்டிகள், தென் இந்திய அளவில் 3 போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் குட்லைப் ஆசிரமம் மற்றும் யோகா கலாசார மையம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி 12-13 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பழனியில் கடந்த 11-ந் தேதி நடந்த தேசிய யோகா போட்டியில் ஜெயவர்தனி கலந்து கொண்டு 12 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையடுத்து கம்போடியா நாட்டில் மே 27-ந்தேதி நடைபெறும் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார்.






